Saturday, October 3, 2020

 உறுப்பினர் பதிவு தொடங்கியது





நமது ஜெகன் கலை இலக்கிய மன்றத்தின் உறுப்பினர் பதிவு  நேற்று 02-10-2020 அன்று மதுரையில் நடைபெற்ற மதுரை-விருதுநகர்-காரைக்குடி மாவட்ட NFTE சங்கங்களின் கூட்டுச் செயற்குழுவின் போது முறைப்படிதுவக்கி வைக்கப்பட்டது. 

முதல் உறுப்பினர் பதிவை தோழர் V.மாரி, காரைக்குடி அவர்கள் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து தோழர் சேது, மற்றும் தோழர் சாகுல் ஹமீது ஆகியோரிடமிருந்து உறுப்பினர் படிவம் பெறப்பட்டது. 

தோழர்களே நமது ஜெகன் கலை இலக்கிய மன்றத்திற்கு ஆண்டுச் சந்தாவாக ரூ.200/-ஐ தோழர்களிடமிருந்து பெறுவது என்றும் மேலும் நிதி தேவைப்படின் வளர்ச்சி நிதியாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. 

தோழர்களே நமது ஜெகன் கலை இலக்கிய மன்றத்தில் உறுப்பினர்களாக இணைவதற்கான இணைய இணைப்பு நமது ஜெகன் கலை இலக்கிய மன்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

மன்றத்தில் இணைய விரும்பும் தோழர்கள் உறுப்பினர் படிவம் என்ற TABஐ Click செய்து தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து Submit என்ற பட்டனை Click செய்து நமது மன்றத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம். 

மேலும் காகித விண்ணப்பமும் நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கிளைப் பொறுப்பாளர்கள் மன்றத்தில் இணைய விரும்பும் தோழர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட காகித விண்ணப்பத்தினை கிளை மட்டத்தில் தோழர்களிடம் கூட்டம் நடைபெறும் சமயங்களில் பெற்றுக் கொண்டு ஆவணப்படுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.